கருவறையில் விளக்கேற்றி... அர்ஜுன் சம்பத் நூதன போராட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் பத்மாபுரம் கிராமத்தில் புதிய பைபாஸ் சாலை அமைப்பதற்காக 1000 ஆண்டுகள் பழமையான பழமைமிக்க பெருமாள் கோவில் கருவறை பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கருவறையில் விளக்கேற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் ஆலய மலையடிவாரத்தில் சிதிலமடைந்துள்ள பிற கோவில்களையும் அதன் நிதியைப் பயன்படுத்தி உடனடியாகச் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.