தமிழ்நாடு

போன வாரம் சிறந்த அதிகாரி விருது - இந்த வாரம் லஞ்ச பெருச்சாளி விருது.. இந்தியன்2-வை விஞ்சிய ட்விஸ்ட்

தந்தி டிவி

அரியலூரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சிக்கியது.

கீழப்பழுவூரில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் விவசாயிகளுக்கான சிறப்பு தொகுப்புகளை வழங்க கூடுதலாக 540 ரூபாய் பெறப்பட்டது தெரியவந்தது. மேலும், இடுபொருள், விதை வழங்க, விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெற்றதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, வேளாண் உதவி இயக்குநர் எழில் ராணியிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் கடந்த சுதந்திர தின விழாவின்போது, சிறப்பாக பணியாற்றியதற்கான நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு