தமிழ்நாடு

போன வாரம் சிறந்த அதிகாரி விருது - இந்த வாரம் லஞ்ச பெருச்சாளி விருது.. இந்தியன்2-வை விஞ்சிய ட்விஸ்ட்

தந்தி டிவி

அரியலூரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சிக்கியது.

கீழப்பழுவூரில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் விவசாயிகளுக்கான சிறப்பு தொகுப்புகளை வழங்க கூடுதலாக 540 ரூபாய் பெறப்பட்டது தெரியவந்தது. மேலும், இடுபொருள், விதை வழங்க, விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெற்றதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, வேளாண் உதவி இயக்குநர் எழில் ராணியிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் கடந்த சுதந்திர தின விழாவின்போது, சிறப்பாக பணியாற்றியதற்கான நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு