தமிழ்நாடு

ராஜேந்திர சோழன் வெட்டிய ஏரியில் மழை வேண்டி விவசாயிகள் வினோத வழிபாடு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழகங்கம் ஏரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேந்திர சோழன் காலத்தில் வெட்டப்பட்டது.

தந்தி டிவி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழகங்கம் ஏரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேந்திர சோழன் காலத்தில் வெட்டப்பட்டது. மழை வேண்டி விவசாயிகள் இந்த ஏரியின் மண்ணெடுத்து, பொம்மை செய்து விவசாய பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து அந்த பொம்மையை துணியில் போட்டு இழுத்து சென்று ஏரியில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் கரைத்தனர். பின்னர், இயற்கை அன்னையே மழை பெய்து விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க மழை பெய்ய செய்ய வேண்டும் தாயே என வேண்டி, வினோத வழிபாடு நடத்தினர். இயற்கையில் விளைவிக்கபட்ட காய் கனிகளை பயன்படுத்தி படையலிட்டு வழிபாடு நடத்தினர். விரைவில் மழை பெய்யும் என வழிபாட்டில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கையுடன் கூறினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி