வெறி பிடித்து கடித்த நாய்.. தீவிர சிகிச்சையில் 3 முதியவர்கள்..10க்கும் மேற்பட்டோரை கடித்த வெறி நாய்-3 முதியவர்களுக்கு தீவிர சிகிச்சை. அரியலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தில் சாலையில் சென்ற 10க்கும் மேற்பட்டோரை வெறி நாய் கடித்ததில், 3 முதியவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். முதியவர்கள் சிந்தாமணி, ஆண்டாள் மற்றும் தங்கராசு ஆகியோரருக்கு, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதால் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதனால் வெறி நாயை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.