ரசாயன கழிவை உண்டு ஆடு, மாடுகள் பலி - கிராம மக்கள் அச்சம் அரியலூர் மாவட்டம் மல்லூர் கிராமத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்படும் ரசாயன கழிவுகளால் ஆடு, மாடுகள் உயிரிழந்து வருகின்றன. இந்த ரசாயன கழிவுகளை யார் வந்து கொட்டுகிறார்கள் என்பதும் மர்மமாகவே உள்ளது. இந்த கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு பொதுமக்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆடு, மாடுகளை கொல்லும் அளவிற்கு கேடு விளைவிக்கும் இந்த ரசாயன கழிவை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.