தமிழ்நாடு

டெல்லி சென்று வந்தவரின் மெடிக்கலில் பணி புரியும் பெண்களுக்கு கொரோனா - இருவரும் மருத்துவமனையில் அனுமதி

அரியலூர் மெடிக்கலில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

அரியலூர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு 5 பேர் சென்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர், செந்துறை பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே அரியலூர் அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது, கொரோனா தொற்று இல்லை என ​தெரியவந்ததால், அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அவரது மெடிக்கலில் வேலை பார்த்த ஊழியர்களை பரிசோதனை செய்தபோது செந்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக, திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரின் உறவினர்கள் பத்து பேரும் மருத்துவ பரிசோதனைக்காக செந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்