தமிழ்நாடு

டெல்லி சென்று வந்தவரின் மெடிக்கலில் பணி புரியும் பெண்களுக்கு கொரோனா - இருவரும் மருத்துவமனையில் அனுமதி

அரியலூர் மெடிக்கலில் வேலை பார்த்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

அரியலூர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு 5 பேர் சென்று வந்த நிலையில், அவர்களில் ஒருவர், செந்துறை பகுதியில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஏற்கனவே அரியலூர் அரசு மருத்துவமனையில் சோதனை செய்தபோது, கொரோனா தொற்று இல்லை என ​தெரியவந்ததால், அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அவரது மெடிக்கலில் வேலை பார்த்த ஊழியர்களை பரிசோதனை செய்தபோது செந்துறையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ராயம்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக, திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருவரின் உறவினர்கள் பத்து பேரும் மருத்துவ பரிசோதனைக்காக செந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு

BREAKING || புது புயலை கிளப்பிய நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு - சி.வி.சண்முகம் வருத்தம்

Breaking | Ramadoss | Anbumani | PMK | பாமக வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் பரபரப்பு உத்தரவு

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்