தமிழ்நாடு

மீண்டும் அட்டகாசம் செய்யும் அரிக்கொம்பன் - தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

தந்தி டிவி

நெல்லை அப்பர் கோதையாறு வனப்பகுதியில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையை, மீண்டும் கேரளாவில் விடக்கோரி அரிக்கொம்பன் மீட்பு குழுவினர் வனத்துறையினரிடம் மனு அளித்துள்ளனர். கம்பம் மற்றும் கேரளாவில் சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பனை பிடித்த தமிழக வனத்துறையினர், அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விட்டனர். கடந்த இரு தினங்களாக நாலுமுக்கு தேயிலை தோட்டங்களில் முகாமிட்ட அரிக்கொம்பன் மீண்டும் அப்பர் கோதையாறு பகுதிக்கு வந்தது. இந்நிலையில், அரிக்கொம்பனை மீண்டும் இடுக்கி சின்னக்கல் பகுதியில் விடக்கோரி கேரள வனவிலங்கு ஆர்வலர்கள், முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ