தமிழ்நாடு

மீண்டும் அட்டகாசம் செய்யும் அரிக்கொம்பன் - தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை

தந்தி டிவி

நெல்லை அப்பர் கோதையாறு வனப்பகுதியில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானையை, மீண்டும் கேரளாவில் விடக்கோரி அரிக்கொம்பன் மீட்பு குழுவினர் வனத்துறையினரிடம் மனு அளித்துள்ளனர். கம்பம் மற்றும் கேரளாவில் சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்த அரிக்கொம்பனை பிடித்த தமிழக வனத்துறையினர், அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விட்டனர். கடந்த இரு தினங்களாக நாலுமுக்கு தேயிலை தோட்டங்களில் முகாமிட்ட அரிக்கொம்பன் மீண்டும் அப்பர் கோதையாறு பகுதிக்கு வந்தது. இந்நிலையில், அரிக்கொம்பனை மீண்டும் இடுக்கி சின்னக்கல் பகுதியில் விடக்கோரி கேரள வனவிலங்கு ஆர்வலர்கள், முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை