தமிழ்நாடு

மதுவினால் ஏற்பட்ட தகராறு - மனமுடைந்த இளைஞர் செய்த செயல்

தந்தி டிவி

வாணாபுரம் அருகே உள்ள ஓடியந்தல் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாதன் என்பவர், தனது நண்பர்களான செல்வம், பிரகாஷ் ஆகியோருடன் கடந்த சனிக்கிழமை மது குடிக்க சென்றார். அங்கு மூவருக்கும் பிரச்னை ஏற்பட்டதில், மனமுடைந்த செல்வம், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்குப் பிறகு, செல்வத்தின் உடல், சொந்த கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், அவருடைய உறவினர்கள் உடலை அடக்கம் செய்யாமல், உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறி போலீசாரிடம் வலியுறுத்தினார்கள். இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்படாத வண்ணம் காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம்ஏற்பட்டது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்