000 ஆண்டு பழமையான கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தோப்புக்கனா பகுதியில் உள்ள 1000 ஆண்டு பழமையான கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மூலவர் மற்றும் அன்னபூரணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.