தமிழ்நாடு

ஆரணி : தொடர்மழையால் நிரம்பிய சுரங்கப்பாதை - போக்குவரத்து பாதிப்பு

ஆரணி அருகே, அம்மாபாளையம் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அம்மாபாளையம் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், கண்ணமங்கலம், மற்றும் திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டுமானால் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடவில்லை என்று கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். அம்மாபாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டிக்கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்