AR Rahman | "வாங்கும் பணத்திற்காகச் சிலர் செய்யும் செயல்கள்.." - இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பு கருத்து சொற்களின் வலிமை குறித்தும், சமூக வலைதள விமர்சனங்கள் குறித்தும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருக்கமாகப் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வார்த்தைகள் மிகவும் பலம் வாய்ந்தவை என்பதால் அளவுடன் பேசுவதே சிறந்தது என்றும், தேவையில்லாமல் பேசிவிட்டால் அன்றைய நாள் முழுவதும் வருந்துவேன் என்றும் கூறினார். மேலும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்பதைப் போலவே, வன்மத்துடன் வரும் விமர்சனங்களையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்றார். வாங்கும் பணத்திற்காகச் சிலர் செய்யும் இத்தகைய எதிர்மறை விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல், நாம் கடந்து செல்வதே நல்லது என அவர் அறிவுறுத்தியுள்ளார்.