தமிழ்நாடு

நிலத்தடி நீர் உறிஞ்சி விற்பனை - பொதுமக்கள் சாலை மறியல்

கண்ணம்பாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை விலங்கடுபக்கம் ஊராட்சியில் உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்க பல முறை மக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு , ஆழ்துளை கிணறுகள் அமைந்துள்ள இடத்தில் இருந்த பைப்புகளையும், மின் சாதன பொருட்களையும் அடித்து நொறுக்கினர். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்