தமிழ்நாடு

உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை

விருதுநகரில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

தந்தி டிவி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, ஒப்பந்ததாரர்களிடம் பணி ஆணை வழங்கும் போது லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஷ்ணுபரன் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்