தமிழ்நாடு

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா : நாளை மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்றிரவு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது.

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்றிரவு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, தங்க மேரு வாகனததில், வீதிஉலா சென்ற பிச்சாண்டவர் சுவாமிக்கு, அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் காணிக்கை அளித்து வழிபட்டனர். தொடர்ந்து, காந்திசிலை அருகே நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கண்காண பொதுமக்கள் கண்டுகளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை அதிகாலை 4 மணியளவில் கருவறை முன்பாக பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்