தமிழ்நாடு

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா : நாளை மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்றிரவு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது.

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்றிரவு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, தங்க மேரு வாகனததில், வீதிஉலா சென்ற பிச்சாண்டவர் சுவாமிக்கு, அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் காணிக்கை அளித்து வழிபட்டனர். தொடர்ந்து, காந்திசிலை அருகே நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கண்காண பொதுமக்கள் கண்டுகளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை அதிகாலை 4 மணியளவில் கருவறை முன்பாக பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி