தமிழ்நாடு

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா : நாளை மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்றிரவு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது.

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்றிரவு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, தங்க மேரு வாகனததில், வீதிஉலா சென்ற பிச்சாண்டவர் சுவாமிக்கு, அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் காணிக்கை அளித்து வழிபட்டனர். தொடர்ந்து, காந்திசிலை அருகே நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கண்காண பொதுமக்கள் கண்டுகளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை அதிகாலை 4 மணியளவில் கருவறை முன்பாக பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி