தமிழ்நாடு

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா : நாளை மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்றிரவு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது.

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நேற்றிரவு பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, தங்க மேரு வாகனததில், வீதிஉலா சென்ற பிச்சாண்டவர் சுவாமிக்கு, அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் காணிக்கை அளித்து வழிபட்டனர். தொடர்ந்து, காந்திசிலை அருகே நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கண்காண பொதுமக்கள் கண்டுகளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை அதிகாலை 4 மணியளவில் கருவறை முன்பாக பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்