அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் சட்ட படிப்பு வழங்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் அண்ணாமலை பல்கலைக் கழகமும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.