தமிழ்நாடு

ஆசிரியர்கள் கல்வி சான்றிதழ் விவகாரம் : "மார்ச் 16-க்குள் சான்றிதழ் அளிக்க வேண்டும்" - அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவு

ஆசிரியர்கள் கல்வி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக மார்ச் 16-க்குள் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவு

தந்தி டிவி

தங்கள் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் பெற்றுள்ள பி.எச்.டி பட்டம் போலியானது அல்ல என்பதற்கான சான்றிதழை வரும் மார்ச் 16-ஆம் தேதிக்குள் தனியார் பொறியியல் கல்லூரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுப்பியுள்ள கடிதத்தில், தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் சிலர் போலி பி.எச்.டி. சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் போலி சான்றிதழ்கள், தவறான ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் ஆகியவற்றை அளித்து பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரிகள் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களை பணியில் சேர்கின்ற போது, அவர்களின் சான்றிதழ் மற்றும் விவரங்களை முழுமையாக பரிசோதித்த பின்னரே பணியில் சேர்க்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே , தங்கள் கல்லூரிகளில் பி.எச்..டி படித்துள்ள பேராசிரியர்கள் பெற்றுள்ள அந்த பட்டம் உண்மையானது என்பதற்கான தர சான்றிதழை, அண்ணா பல்கலைக் கழகத்திடம் வரும் மார்ச் 16-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்