தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக , லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு தலைவர் கார்த்திக் என்பவர் அளித்த புகாரில் உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத 92 கல்லூரிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடாததால், இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, போலி சான்றிதழ்களை கொடுத்து பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்ததாக கூறி 2 பேராசிரியர்களின் விவரங்களை வெளியிட்டது குறித்தும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் இதே அமைப்பு மற்றொரு புகாரை அளித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை