தமிழ்நாடு

அண்ணா பிறந்தநாளையொட்டி 130 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு

அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் பணியாளர்களுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் 100, தீயணைப்பு துறையில் 10, சிறைத்துறையில் 10, ஊர்க்காவல்படையில் 5, விரல்ரேகை மற்றும் தடயஅறிவியல் துறையில் 5 என மொத்தம் 130 பதக்கங்கள் இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். மேலும் மணல் திருட்டை தடுக்கும் போது உயிர்நீத்த காவலர் ஜெகதீஷ் துரைக்கு, முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான காவல் பதக்கமும், அவரது குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் வெகுமதியும் வழங்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி