தமிழ்நாடு

கடனை திரும்ப செலுத்த வங்கி நெருக்கடி : வீட்டை ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் - விஷம் குடித்து விவசாயி தற்கொலை

வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாததால் மனம் உடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி

ஆண்டிப்பட்டி அருகே சிறப்பாறை கிராமத்தை சேர்ந்த விவசாயி தர்மலிங்கம் தனியார் வங்கியில் 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். போதிய விளைச்சல் இருந்தும் உரிய லாபம் கிடைக்காததால், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என தெரிகிறது. கடனை திரும்ப செலுத்துமாறு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த வங்கி அதிகாரிகள், வீட்டை ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் அனுப்பினர். இதனால் மனம் உடைந்த விவசாயி தர்மலிங்கம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் நெருக்கடியால், விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ