தமிழ்நாடு

கடனை திரும்ப செலுத்த வங்கி நெருக்கடி : வீட்டை ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் - விஷம் குடித்து விவசாயி தற்கொலை

வங்கிக் கடனை திரும்ப செலுத்த முடியாததால் மனம் உடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தந்தி டிவி

ஆண்டிப்பட்டி அருகே சிறப்பாறை கிராமத்தை சேர்ந்த விவசாயி தர்மலிங்கம் தனியார் வங்கியில் 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். போதிய விளைச்சல் இருந்தும் உரிய லாபம் கிடைக்காததால், கடனை திரும்ப செலுத்த முடியவில்லை என தெரிகிறது. கடனை திரும்ப செலுத்துமாறு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த வங்கி அதிகாரிகள், வீட்டை ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் அனுப்பினர். இதனால் மனம் உடைந்த விவசாயி தர்மலிங்கம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடன் நெருக்கடியால், விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்