தமிழகத்தை ஆள்வது தங்கள் இலக்கு அல்ல, வளர்ச்சி மட்டுமே இலக்கு என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியில் பாமக பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், விவசாயிகளை கடவுளாக பார்க்க வேண்டும் என்றார். எனவே, தங்கள் கூட்டணிக்கு ஆதரவு தருமாறும், அதிமுக தலைமையிலான தங்களது கூட்டணியை வெற்றிபெறச் செய்யுமாறும் அன்புமணி கோரினார்.