தமிழகத்தில் அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் 33 பட்ட மேற்படிப்புகள், அரசு வேலைவாய்ப்புக்கு தகுதியற்றவை என தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என, பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதன்மூலம், "அரசு வேலை" என்ற கனவுடன் படித்த மாணவர்களின் எதிர்காலம் சிதைக்கப்பட்டு உள்ளதாக அறிக்கையொன்றில், டாக்டர் அன்புமணி தமது கவலையை பதிவு செய்துள்ளார்.