தமிழ்நாடு

"மாணவர்களின் யோசனைகளை படைப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து

தந்தி டிவி

மாணவர்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சார்பில் புதிய தளத்தை ஏற்படுத்தி தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் டார்வின் அறிவியல் மன்றம் சார்பில் அறிவியலைக் கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசினார். மாணவர்களின் கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அதற்கான காப்புரிமைகளை பெறுவதும் அவசியம் என்றார். மாணவர்களின் படைப்புகளை ஊக்குவிப்பதற்காக கடந்த ஆண்டில் இருந்து நிதியுதவி கொண்டுவந்திருப்பதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி