தமிழ்நாடு

20 லட்சத்தில் அடிக்கல் நாட்ட சென்ற MLA.. வாக்குவாதம் செய்த மக்களால் பரபரப்பு

தந்தி டிவி

நிழற்குடை அமைக்க அடுத்தடுத்து எதிர்ப்பு - விழிபிதுங்கிய அதிகாரிகள்

கல்பாக்கம் இ.சி.ஆர். சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க அடுத்தடுத்து 2 இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் தலா 20 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு நிழற்குடை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் பனையூர் எம். பாபு நிதி ஒதுக்கியுள்ளார். அதன்படி, நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்ட சென்றபோது கடைக்காரர் ஒருவர் தனது கடைக்கு எதிரே நிழற்குடை அமைக்க கூடாது என வாக்குவாதம் செய்தார்.

இதனால் வேறு இடத்தில் அடிக்கல் நாட்ட முயன்றபோது அங்கும் நிழற்குடை அமைக்க ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு நேர பரபரப்புக்கு பிறகு வேறு இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு