தமிழ்நாடு

பேருந்தில் செல்ல கையில் பணமில்லாமல் 190 கி.மீ நடந்தே சென்ற 85 வயது முதியவர் - தடுத்து நிறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் செய்த செயல்

தந்தி டிவி

சேலத்தைச் சேர்ந்த 85 வயதான பழனிச்சாமி என்ற முதியவர், வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே நடந்தே செல்வதை கவனித்த நெடுஞ்சாலை துறையினர், சுங்கச்சாவடியில் உள்ள உதவி மையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் மற்றும் ஊழியர்கள் விசாரித்ததில், சென்னையில் இருந்து சேலத்திற்கு பேருந்தில் செல்ல பணம் இல்லாததால், கடந்த 3 நாட்களாக சுமார் 190 கிலோமீட்டர் நடந்து சென்றதாக கூறியுள்ளார். இதனையடுத்து முதியவருக்கு புத்தாடை மற்றும் வழிச்செலவுக்கு பணம் வழங்கிய ஊழியர்கள், சேலம் பேருந்தில் ஏற்றி அவரை வழியனுப்பி வைத்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்