தமிழகத்தையே உலுக்கிய அமோனியா கசிவு - குணமடைந்தவர்கள் பத்திரமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு அம்மோனியா வாயு கசிவு விபத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 62 தொழிலாளர்கள் அவருடைய சொந்த மாநிலத்திற்கு மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்..... திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.... இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 62 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்கள் இன்று சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் நிலையத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர்...