அம்மா உணவகத்தில் ரகளை - ஒருவர் கைது நெல்லை தச்சநல்லூரில் உள்ள அம்மா உணவக ஊழியர்களுடன் தகராறு செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாம்பார் சாதம் தீர்ந்துவிட்டதாக கூறியதால் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த மேஜை, நாற்காலிகளை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அவர் மது போதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.