சாப்பிடும் போது சிறப்பு குழந்தைகளை கொடூரமாய் தாக்கிய பெண் - வலி தாங்காமல் கதறிய பகீர் CCTV சிறப்பு குழந்தைகளை தாக்கிய சிறப்பு பள்ளி நிர்வாக பெண் அம்பத்தூர் அருகே உள்ள சிறப்பு பள்ளியில், குழந்தைகளை பெண் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கள்ளிக்குப்பத்தில் உள்ள சிறப்பு பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவரின் உடலில் காயம் இருந்ததை தொடர்ந்து பெற்றோர் முறையிட்டனர். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், உணவு அளிக்கும் போது பெண் ஒருவர் சிறுவனை தலையைப் பிடித்து ஆட்டி, கம்பால் அடித்தது பதிவாகியிருந்தது.