சென்னை அம்பத்தூரில் சிறுமி பலியில் திடீர் திருப்பம்... 8 மாதங்களுக்கு பின் தோண்டி எடுக்கப்படும் உடல் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அருகே தவறான சிகிச்சையால் சிறுமி பலியானதாக கூறப்படும் சம்பவத்தில், சிறுமியின் உடலை 8 மாதங்களுக்கு பின் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.... நெஸ்லின் ரியா என்ற சிறுமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காய்ச்சலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.. தவறான சிகிச்சை தான் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்... இது தொடர்பாக சிறுமியின் தாய் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் அளித்த புகாரின் அடிப்படையில், 2 மருத்துவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது... இந்நிலையில் 8 மாதங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது... பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது...