உலகின் உயர்ந்த எவரெஸ்ட் மலையில் உள்ள குப்பைகளை அகற்ற தற்போது ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆறாயிரத்து 65 மீட்டர் உயரம் வரை பறக்கும் இந்த ட்ரோன்கள் இதுவரை 300 கிலோக்கும் அதிகமான குப்பைகளை அகற்றியுள்ளன. இதுவரை குப்பைகளை அகற்ற மனிதர்கள் மற்றும் ஹெலிகாப்டர்களே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ட்ரோன்கள் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இந்தப் பணியை செய்வது மட்டுமின்றி கயிறு, ஆக்ஸிஜன் சிலிண்டர் போன்ற பொருட்களையும் மலையேற்றதின் போது எடுத்துச் செல்ல உதவுவதாக கூறப்படுகிறது.