மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியை, நிறைவு நாளில் ஏராளமானோர் பார்வையிட்டனர். நவராத்திரி விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் ஏற்பாட்டில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில், கொலு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நவராத்திரியின் நிறைவு நாளில், திரளான பொதுமக்கள் கொலு கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.