திருவாரூர் மாவட்டம் , இடையர் எம்பேத்தி ஊராட்சி மன்ற தலைவர்
பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் நாகராஜ் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். வாக்குப்பதிவு முடிவுற்று , வாக்கு எண்ணிக்கை வருகிற ஜன 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தி.மு.க வேட்பாளர் அ.தி.மு.க வில் இணைந்தது தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.