தமிழ்நாடு

"அ.தி.மு.க ஆட்சியில் அதிக நீர் விநியோகம்" - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

தி.மு.க ஆட்சி காலத்தைவிட, தற்போதைய அரசு தான் அதிக தண்ணீர் விநியோகம் செய்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி
சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, அ.தி.மு.க அரசு 37 ஆயிரம் கோடி செலவு செய்தும், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை தீரவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்துங்கள் என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தி.மு.க ஆட்சி காலத்தைவிட அ.தி.மு.க ஆட்சியில் தான் 7 ஆயிரத்து 508 டிஎம்சி நீர் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவும் போது கூட, மக்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு