திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கார் மோதி படுகாயம் அடைந்த இரண்டு பேருக்கு அதிமுக எம்.எல்.ஏ பரமசிவம் உதவி செய்தார். வேடசந்தூர் அருகே கேத்தம்பட்டியை சேர்ந்த ஜோதிராஜ் என்பவர் தனது நண்பர் சண்முகவேலுடன் கோவைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு கார், மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்த வேடசந்தூர் எம்.எல்.ஏ பரமசிவம், இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.