தமிழ்நாடு

அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு.. எடப்பாடி பழனிசாமி பதில் மனுத்தாக்கல்

அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு.. எடப்பாடி பழனிசாமி பதில் மனுத்தாக்கல்

தந்தி டிவி

அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு.. எடப்பாடி பழனிசாமி பதில் மனுத்தாக்கல்

அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை, அபராதத்துடன் நிராகரிக்க கோரி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.உட்கட்சி தேர்தலை நடத்தாமல், நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி, சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், மதுசூதனன், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், கட்சின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதிமுக தலைமையை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டதால், யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு