தமிழ்நாடு

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள் இணைந்து முயற்சி...

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் இந்த நடவடிக்கை நாகர்கோவில் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் சில பகுதிகளில் வாரத்திற்கு ஒரு முறையும், சில பகுதிகளில் 2 வாரங்களுக்கு ஒரு முறையும் சில பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இதனையடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய் சுந்தரம் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் ஆகியோர் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாநகராட்சி ஆணையாளர் உடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம், குடி நீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி அலுவலர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் இந்த நடவடிக்கை நாகர்கோவில் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு