தமிழ்நாடு

அதிமுக Ex.ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கு.. நீதிமன்றத்தில் 3 பேர் சரண்...

தந்தி டிவி

திருவள்ளூரில் அதிமுக முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் ஆற்காடு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, மணலியை சேர்ந்த ஹரி, காசிமேடு மோகன், திருவள்ளூரை சேர்ந்த சக்திவேல் ஆகியோர், ஆற்காடு குற்றவியல் நீதிமன்றத்தில் சரண‌டைந்தனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதும், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்