ஆதனக்கோட்டை ஜல்லிக்கட்டுப்போட்டி கோலாகலம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப்போட்டி கோலாகலமாக நடைபெற்றது..
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 750 காளைகள் களமிறக்கப்பட்டன.
350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை திறமையாக அடக்கி அசத்தினர்..
வெற்றிப்பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் இந்த ஜல்லிக்கட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.