சென்னையில் ஆசிட் வீச்சு சம்பவத்தால் கண் பார்வை இழந்த பெண்ணை சந்தித்த நடிகை அம்பிகா சென்னை அடுத்த பல்லாவரத்தில் கணவரின் ஆசிட் வீச்சு சம்பவத்தில் கண் பார்வை இழந்த பெண்ணை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அனகாபுத்தூரைச் சேர்ந்த முகமது அலி என்பவர் குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியின் முகத்தில் ஆசிட் வீசியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அந்த பெண் கண்பார்வையை இழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகை அம்பிகா, அவரது உடல்நிலையை விசாரித்து ஆறுதல் கூறினார்.