தமிழ்நாடு

நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் - வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
பனையூரில் நடிகர் விஜய் வீட்டில் 8க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பிகில் படம் தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற வருமான வரி சோதனை யின்போது நடிகர் விஜய் வீட்டில் சில ஆவணங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சீலை அதிகாரிகள் நீக்கி ஆவணங்கள் தொடர்பாக, விஜய்யின் நிர்வாகிகளிடம் விசாரித்தனர். அப்போது மாஸ்டர் படத்தில் பெற்ற சம்பளம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. இதில் பிகில் படத்திற்கு நடிகர் விஜய் 50 கோடி ரூபாய் சம்பளமும், மாஸ்டர் திரைப்படத்திற்கு 80 கோடி ரூபாயையும் சம்பளமாக பெற்றது தெரியவந்தது. இதற்கான வரியை விஜய் சரியாக செலுத்தியது தெரியவந்ததை அடுத்து, வருமான வரித்துறையினர் புறப்பட்டு சென்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"