தமிழ்நாடு

எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக தேவையில்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாக புகார்

தந்தி டிவி

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, கோபால்சாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் நெல்லை மாவட்ட நீதிமன்றம் எஸ்.வி.சேகரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. அதில் இருந்து விலக்கு அளிக்க கோரி எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக தேவையில்லை என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பான வழக்கை விசாரிக்க 6 வாரகாலத்திற்கு தடை விதித்தும் அவர் உத்தரவிட்டார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை