தமிழ்நாடு

உச்சநீதிமன்றம் சென்ற எம்.பி. கதிர் ஆனந்த் - வருமான வரித்துறைக்கு அதிரடி உத்தரவு

தந்தி டிவி

வருமான வரி வழக்கில், வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கதிர் ஆனந்த் சார்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கதிர் ஆனந்த் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.கணேஷ், பி. வில்சன் ஆஜராகி வழக்கு கடந்து வந்த பாதையை குறிப்பிட்டு வாதிட்டனர். வாதத்தை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திமுக எம்பி கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டனர். இது தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கும் இடைக் கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை