கோவை மாவட்டம் அன்னூர் அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பண்ணாரி அம்மன் கோவில் தரிசனம் செய்து குடும்பத்துடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அன்னூர்–புளியம்பட்டி சாலையில் எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சூலூர் பகுதியை சேர்ந்த கதிரேசன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தண்ணீர் லாரி டிரைவரும் காயமடைந்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.