சென்னை கோடம்பாக்கத்தில் சிலிண்டர் வெடித்ததில், ஏசி மெக்கானிக் ஒருவரின் இரு கைகளும் துண்டிக்கப்பட்டது.
தாஸ்புரத்தைச் சேர்ந்த திலீபன் என்பவர், ஏசி பழுதுபார்ப்பதற்காக பெரிய சிலிண்டரிலிருந்து சிறிய சிலிண்டருக்கு நைட்ரஜன் வாயுவை மாற்ற முயன்றபோது, அழுத்தத்தின் காரணமாக சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் பலத்த காயமடைந்த திலீபன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.