தமிழ்நாடு

விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது அறிவிப்பு

நாளை நடைபெற உள்ள 73-வது சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.

தந்தி டிவி
இந்திய எல்லைக்குள் அத்து மீறிய பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை துரத்திச் சென்று தாக்கி அழித்தவர் அபிநந்தன். மேலும், பாகிஸ்தான் நாட்டு ராணுவத்திடம் சிக்கிய போதும் சூழ்நிலையை தீரத்துடன் எதிர்கொண்டு, இந்தியாவுக்கு திரும்பி வந்தார். இந்நிலையில், அபிநந்தனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது அறிவித்துள்ளது. இதே போல், தீயணைப்புத்துறையில் வீரதீர சேவை புரிந்த 56 வீரர்களுக்கும், குடியரசு தலைவர் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இவர்களில், தமிழகத்தை சேர்ந்த அதிகாரி உமாபதி தண்டபாணிக்கு துணிச்சலுக்கான விருது வழங்கப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்