தமிழ்நாடு

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், நேரில் ஆஜர் ஆக முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

தந்தி டிவி
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், நேரில் ஆஜர் ஆக முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதன்படி, வருகிற 4 ம் தேதி, டாக்டர் சரவணன், மாதவன், ஜெ. தீபா, ஜோசப், மதுரை பாலன், பாலமுருகன், ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் ஆஜராக வேண்டும். ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமலிங்கத்திடம் மறு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ள நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், 5 ம் தேதி, டாக்டர்கள் சத்தியபாமா, ராமச்சந்திரன், அர்ச்சனா மற்றும் அதிமுக பிரமுகர் மனோஜ் பாண்டியன் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது. 6 ம் தேதி, ஐபிஎஸ் அதிகாரி ஜார்ஜ், டாக்டர் விக்ரம் , டாக்டர் ராஜ் மாதங்கி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்