தமிழ்நாடு

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், நேரில் ஆஜர் ஆக முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

தந்தி டிவி
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், நேரில் ஆஜர் ஆக முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதன்படி, வருகிற 4 ம் தேதி, டாக்டர் சரவணன், மாதவன், ஜெ. தீபா, ஜோசப், மதுரை பாலன், பாலமுருகன், ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் ஆஜராக வேண்டும். ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமலிங்கத்திடம் மறு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ள நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், 5 ம் தேதி, டாக்டர்கள் சத்தியபாமா, ராமச்சந்திரன், அர்ச்சனா மற்றும் அதிமுக பிரமுகர் மனோஜ் பாண்டியன் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது. 6 ம் தேதி, ஐபிஎஸ் அதிகாரி ஜார்ஜ், டாக்டர் விக்ரம் , டாக்டர் ராஜ் மாதங்கி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்