51-வது மாநில துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்கம் சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற 51-வது மாநில துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியை, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் துப்பாக்கியால் இலக்கை குறிவைத்து சுட்டு துவக்கினார். தொடர்ந்து, துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டுக்கான கட்டமைப்புகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், தானும் இவ்விளையாட்டை கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்