தென்காசியில் தலை துண்டித்து வாலிபர் படுகொலை தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் வேன் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்த சந்தானம் என்ற இளைஞரை மர்ம நபர்கள் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பசும்பொன் நகரைச் சேர்ந்த அவரது உடலைக் கைப்பற்றியுள்ள கடையம் போலீசார், சம்பவ இடத்திலிருந்த மர்ம நபர்களின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.