டிக்கெட் பரிசோதகரிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த வடமாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 4 ஆம் தேதி சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த வடமாநில இளைஞர்
டிக்கெட் பரிசோதகருக்கு பயந்து நந்தியம்பாக்கம் அருகே ஒடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார்.
இதில் படுகாயமடைந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர், 4 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்