தமிழ்நாடு

கள்ளக்காதலன் பேச மறுத்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண் - வெளிநாட்டில் கணவர்.. அனாதைகளான 2 பிள்ளைகள்

தந்தி டிவி

கள்ளக்காதலன் பேச மறுத்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண் - வெளிநாட்டில் கணவர்.. அனாதைகளான 2 பிள்ளைகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கள்ளக்காதலன் பேச மறுத்ததால், வார்டு உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போகநல்லூர் ஊராட்சியின் 3-வது வார்டு உறுப்பினர் பேச்சித்தாய், இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

தனது இரண்டு குழந்தைகளுடன் சுந்தரேசபுரம் கிராமத்தில் வசித்து வந்த பேச்சித்தாய்க்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

பல்வேறு பிரச்சனை காரணமாக அந்த இளைஞர் பேச்சித்தாயுடன் பேசவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த வார்டு உறுப்பினர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரு குழந்தைகளின் குறித்து சிந்திக்காமல் கள்ளக்காதலுக்காக வார்டு உறுப்பினர் உயிரைவிட்ட நிகழ்வு, உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை