தமிழ்நாடு

"ஒரு பெண்ணும், ஆணும் தங்கியிருந்தாங்க"... ரவுடிகள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு

தந்தி டிவி

நெல்லை மாவட்ட கொலை குற்றவாளியான

சிவ சுப்பிரமணியம் என்பவரை, ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் வைத்து போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, சிவாவும் அவரது கூட்டாளிகளும் போலீசாரை தாக்கியதும், போலீசார் ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், சிவசுப்ரமணியம் உட்பட இருவரை போலீசார் நெல்லை அருகே துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது பரபரப்பை மேலும் கூட்டியது. தொடர்ந்து இரு ரவுடிகளையும் மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் மற்ற ரவுடிகளை வலை வீசி தேடி வந்தனர். இதனிடையே, ரவுடிகள் நால்வரும் தங்கியிருந்த குள்ளம்பாளையம் விவசாயத் தோட்ட இல்லத்தில் தடயவியல் நிபுணர்களுடன் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்திய போது, பெண் ஒருவர் மூலம் ரவுடிகள் வீடு வாடகைக்கு கேட்டதாகவும், தன் வீட்டு பெண்கள் விசாரிக்காமல் தங்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்